News Just In

12/08/2021 08:25:00 PM

“அக்கரைப்பச்சை” கவிதை நூல் வெளியீடு!

இலக்கியமணி கலாபூஷணம் கவிஞர் ஏ.சி. அப்துல் றஹுமான் எழுதிய அக்கரைப்பச்சை எனும் கவிதை நூல் வெளியீடு வெள்ளிக்கிழமை 10.12.2021 மாலை 6 மணிக்கு ஏறாவூர் வாவிக்கரையோரம் அமைந்துள்ள கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

இது கதாசிரியரின் மூன்றாவது நூல் வெளியீடாகும். அகில இந்திய தேச பிதா விருது விழாவிலும் கௌரவிக்கப்பட்டுள்ள கவிஞரும் சிறுகதை எழுத்தாளரும் ஹாஷ்ய நடிகருமான அப்துல் றஹுமான் இதற்கு முன்னர் கூடிழந்த குருவிகள் எனும் சிறுகதைத் தொகுதியையும் “மாறாத் துயரம்” எனும் நூலையும் வெளியிட்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“எளிமையே எங்கள் நபியின் வெற்றிப் படிகள்” எனும் இவரது கவிதை தேசிய ரீதியில் முதலாமிடத்தை தக்க வைத்து விருதுகளையும் பெற்றுக் கொண்டது.

.எச்.ஹுஸைன்




No comments: