இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 198 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 81 பெண்களும் 117 ஆண்களும் கொரோனா தொற்றால் மரணித்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,183 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிக கொரோனா மரணங்கள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
No comments: