News Just In

6/12/2021 09:46:00 PM

திருகோணமலை- மூதூர் மத்திய கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்...!!


திருகோணமலை- மூதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் புதிய அதிபராக இலங்கை அதிபர் சேவை தரம் 01ஐ சேர்ந்த S.A.Muheer - BA(Arts), MA(Political Science), Diploma in Education and Diploma in Education Management அவர்கள் அரசாங்க பொதுச் சேவை ஆணைக்குழுவின், கல்வி சேவை குழுவின் அனுமதிக்கமைய கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.கபில.சீ.கே.பெரேரா அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் வெற்றிடம் நிலவிய பல தேசிய பாடசாலைகளுக்கு இவருடன் நியமனம் கிடைக்கப்பெற்ற அதிபர்கள் கடமைப் பொறுப்பேற்று வரும் நிலையில் மூதூர் மத்திய கல்லூரியின் அதிபராக ஜனாப். எஸ். அப்துல் முஹீர் அவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை 2021.06.14 திகதியன்று கடமையைப் பொறுப்பேற்க உள்ளார்.

No comments: