News Just In

6/12/2021 10:13:00 PM

மட்டக்களப்பில் இன்று 80 பேருக்கு கொரோனா தொற்று; ஒருவர் உயிரிழப்பு- இதுவரை 16409பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(12) 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29 பேருக்கும்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08பேருக்கும்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07பேருக்கும்
ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16பேருக்கும்
பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேருக்கும்
வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08பேருக்கும்
வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒருவருக்குமாக
இன்று மாத்திரம் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தடுப்பூசியானது மட்டக்களப்பில் இன்று ஐந்தாவது நாளாக ஏற்றப்பட்டு வருகின்றது. அதன்படி மொத்தமாக 16409 தடுப்பூசிகள் இதுவரை ஏற்றப்பட்டுள்ளதாகவும் இதில்,
2021.06.08 அன்று 1351 தடுப்பூசிகளும்
2021.06.09 அன்று 3476 தடுப்பூசிகளும்
2021.06.10 அன்று 4321 தடுப்பூசிகளும்
2021.06.11 அன்று 2827 தடுப்பூசிகளும்
2021.06.12 அன்று 4434 தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளர்.

இதேவேளை கொரோனா தொற்று மூன்றாவது அலை கடந்த ஏப்பிரல் 22 ம் திகதி ஆரம்பித்த நிலையில் இதுவரை 47 பேர் உயிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியால் 56 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: