News Just In

6/23/2021 05:27:00 PM

மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் தேங்காய் திருடிய இருவர் சிக்கினர்...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
தேங்காய் திருடிய இருவரை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மடக்கிப் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று இன்று (23) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் அமைந்துள்ள தென்னந்தோட்டத்தில் இன்று மூவர் சேர்ந்து தேங்காய் திருடிய போது அதில் இருவர் வசமாக சிக்கியுள்ளனர்.

தங்களது தோட்டத்தில் தேங்காய்கள் இவ்வாறு தொடர்ந்தும் திருடப்படுவதாகவும் அதனை இன்றைய தினம் கண்காணித்த போது இத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பொதுமக்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்ததாக தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு திருடப்பட்ட 52 தேங்காய்களுடன் இரு நபர்களையும் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: