News Just In

6/23/2021 06:12:00 PM

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் விழிப்புணர்வு பதாகை திறப்பு...!!


( எம். என். எம். அப்ராஸ்)
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் விழிப்புணர்வு பதாகை திறத்து வைக்கப்பட்ட்து.

இலங்கை சமாதானமும் சமூகப் பணியும் (PCA) அமைப்பின் அனுசரணையில் இயங்கும் காரைதீவு பிரதேச பிரதேச நல்லிணக்க மன்றத்தினால் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புட்டும் வகையில்கொரோனா தொற்று மற்றும் டெங்கு நோய் தொடர்பான அறிவுறுத்தல் அடங்கிய விழிப்புணர்வு பதாகை இன்று (23.06. 2021) திறந்து வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச நல்லிணக்க மன்றத்தின் செயலாளர் எம்.ஐ .ரியால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பசீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் சமாதானமும் சமூகப் பணியும் (PCA) அமைப்பின் திட்ட இணைப்பாளர் த .ராஜேந்திரன், இணைப்பாளர் கே.ரி.ரோஹிணி, காரைதீவு பிரதேச நல்லிணக்க மன்றத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் இதன் கலந்து கொண்டனர் .







No comments: