News Just In

6/22/2021 10:12:00 AM

சம்மாந்துறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக ஒருவர் மீட்பு...!!


(நூருல் ஹுதா உமர்)
தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவு மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள சம்மாந்துறை உடங்கா 02, 14ஆம் வீதியை சேர்ந்த 34 வயதை உடைய அப்துல் றஹீம் சியாத் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (22) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணத்துக்கான காரணம் மற்றும் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: