News Just In

6/11/2021 05:27:00 PM

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பு...!!


நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

எனினும், கொரோனா பரவல் நிலைமை அதிகரித்து வருகின்றமையால் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments: