அதன் அடிப்படையில் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
இலங்கையில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட அதிகளவான மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இதன்படி இலங்கையில் இதுவரையில் கொவிட்19 நோயினால் 2011 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பணிமனை அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் இதுவரை காலத்தில் இலங்கையில் ஒரே சமயத்தில் பதிவான அதிகூடிய கொவிட் மரண எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
No comments: