News Just In

5/24/2021 07:29:00 PM

காரைதீவில் சுற்றிவளைத்து அண்டிஜென் பரிசோதனை- ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்!!


நூருள் ஹுதா உமர்
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று மேற்கொண்ட சுமார் 75 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் ஒருவர் மட்டும் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் மற்றும் கொரோனோ ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தலைமையிலான சம்மாந்துறை பொலிஸார், பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு அண்டிஜென் பரிசோதனையின் போதே இந்த பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

வீதியில் உலாவித்திரிந்தோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோர், சுகாதார நடைமுறைகளைப் பேனாதோர், மீனவர்கள் என பலருக்கும் மேற்கொண்ட இந்த பரிசோதனையில் ஒரு இளைஞர் மட்டும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார். அவருக்கு தொற்றுள்ளதை உறுதிப்படுத்தியதை அடுத்து தொற்றாளரின் குடும்பத்தினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் குடும்பத்தினருக்கு தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது









No comments: