News Just In

5/18/2021 01:19:00 PM

நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களால் அனுஷ்டிப்பு!


இலங்கையில் 2009 இறுதி கட்ட போரின் போது இலங்கை இராணுவத்தால் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட இனப்படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினமானது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு மேற்கொள்ளப்பட்டது.






No comments: