தொடராக மூன்று நாட்கள் கடையடைப்பின் பின்னர் நேற்று திங்கட்கிழமை (17) வாழைச்சேனை பொலிஸ் பிரிவு வழமைக்குத் திரும்பியுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை (17) காலை 4 மணி வரை பயணத் தடை மற்றும் வியாபார நிலையங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில், நேற்று (17) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை உட்பட பல பகுதிகளில் வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற.
அத்தோடு, பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க குறித்த பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments: