பிபிலைப் பகுதியின் நன்னபுராவ என்ற இடத்தைச் சேர்ந்த டி.எம். சேனுல சேகான் என்ற ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையே இவ்வாறு பலியாகியுள்ளது.
குறித்த குழந்தையின் தந்தை செலுத்திய முச்சக்கரவண்டி சில்லில், மேற்படி குழந்தை சிக்குண்டதையடுத்து, உடனடியாக அக்குழந்தை பிபிலை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள், அக்குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட மெதகமை பொலிசார், முச்சக்கரவண்டியை செலுத்திய குறித்த குழந்தையின் தந்தையை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
No comments: