நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவரை பார்வையிடுவதற்காக நேற்று மாலை வந்திருந்த பெண்ணொருவரை சோதனைக்குட்படுத்தியுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் அவரிடமிருந்து தடைச் செய்யப்பட்ட பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, குறித்த பெண்ணினால் எடுத்துவரப்பட்ட காற்சட்டை ஒன்றை சோதனைக்குட்படுத்திய அதிகாரிகள் , அதில் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த , 4 போதைப் பொருள் பக்கற்றுகளையும் , சிம் அட்டை ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து , திம்பிரிகஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகளுக்காக அவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
No comments: