இலங்கையில் எதிர்வரும் காலங்களில் பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தர வதிவிடமாக இருக்கும் ஆசிரியர்களுக்கு மாத்திரமே நியமனங்கள் வழங்குவதில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இம்முறை நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது முழுச் சேவைக் காலத்திலும் குறித்த பாடசாலைகளிலேயே பணியாற்ற வேண்டும்.
மேலும் இடமாற்றங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
No comments: