News Just In

4/19/2021 08:55:00 PM

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 97000 ஆக உயர்வு- இறந்தவர்களின் எண்ணிக்கை 620ஆக உயர்வு!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளது.

இத்துடன் இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 204 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 97,000 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் 3 ஆயிரத்து 269 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

No comments: