மட்டக்களப்பு- கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளரின் அயராத தொடர் முயற்சியினால் பால்சேனை மற்றும் கதிரவெளி மக்களுக்ககான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று பிரதேச செயலாளர் திரு. சு.ஹரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் வைபவத்தில் காணிக் கிளை உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் முதற் கட்டமாக 100 பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது. எதிர்வரும் வாரங்களில் ஏனைய கிராம பிரிவுகளுக்கும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: