News Just In

4/20/2021 10:34:00 AM

119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தை தவறாக பயன்படுத்திய இரண்டு பெண்கள் கைது!!


119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தை தவறாக பயன்படுத்திய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கொட்டுவ பொலிஸாரினால் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹள தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த போலி தொலைபேசி தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த அழைப்பை ஏற்படுத்திய 25 வயதுடைய பெண் ஒருவரும் அந்த அழைப்பை மேற்கொள்வதற்கு தொலைபேசி வழங்கிய 28 வயதுடைய அவரது சகோதாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்தர்கள் என விசாரணையில் தெரியவந்துளளது. போலி அழைப்பேற்படுத்தி பொலிஸாரை குழப்பிய குற்றச்சாட்டிற்கமைய இந்த பெண்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: