News Just In

3/21/2021 07:01:00 PM

திருகோணமலை- கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுதலை!!


எப்.முபாரக்
வன இலாக்கா அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த கந்தளாய் பிரதேச சபையின் மொட்டு அணி உறுப்பினரான விஜே விக்ரம லமா ஹேவா என்பவரை இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு கந்தளாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினரான இவர் வான் எல பிரதேசத்திலுள்ள காடுகளை அழித்து தனது ஆதரவாளர்களுக்கு வழங்குவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்ற வன இலாகா அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக வான் எல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த பிரதேசசபை உறுப்பினரைக் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதவான் திஸானி தேனபது முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் இருவர் சாட்சிகள் கையொப்பமிட்ட பின்னர் விடுவிக்குமாறு கந்தளாய் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் ஐந்தாம் மாதம் 20ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் கந்தளாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




No comments: