News Just In

3/21/2021 06:48:00 PM

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது!!


நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று மேலும் 177 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் தொற்றுறுதியான 2 ஆயிரத்து 719 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கமைய அனைத்து உலக ரீதியிலான கொவிட்-19 பரவல் நாடுகளின் பட்டியலில், சீனாவுக்கு அடுத்த இடத்தில் இலங்கை பதிவாகியுள்ளது.

சீனாவில் 90 ஆயிரத்து 99 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, அனைத்து உலக ரீதியிலான கொவிட்-19 பரவல் பட்டியலில் 87வது இடத்தில் சீனா பதிவாகி உள்ளது.

இதையடுத்து 88வது இடத்தில் இலங்கை பதிவாகியிருக்கின்றது.

No comments: