News Just In

3/21/2021 06:43:00 PM

தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!!


திருகோணமலை - தம்பலகாமம் - பத்தினிபுரம் பகுதியில் குடிசையொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நல்லூர் - மூதூர் பகுதியை சேர்ந்த 46 வயதான பெண்ணொருவரே இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

No comments: