தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை வெளி நாடுகளில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் பெருந்தொகை அந்நியச் செலாவணி செலவிடப்படுகின்றது.
அடுத்த வருடம் முதல், தேவையான கொடிகளை உயர் தரத்துடன் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு பத்திக் மற்றும் கைத்தறித் துறையில் உள்ள உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேககர தெரிவித்துள்ளார்.
பத்திக் உற்பத்தியிலான தேசிய கொடியை நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்று ஜனாதிபதிக்கு கையளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.


No comments: