நாளை (27) முதல் சட்டப்படி வேலையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை , எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 5 நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
6 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறையின் கீழ் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.
இதேவேளை , அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் இசுறுபாயவிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: