News Just In

2/29/2020 09:44:00 AM

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தின் பொது மைதான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

-நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தின் 03ம் கட்ட அபிவிருத்திப்பணி கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், அ.இ.ம. காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான

கலாநிதி. சிராஸ் மீராசாஹிபினால் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், கண்காட்சி கிரிக்கட் போட்டியும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டு கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று (28) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டு கழகங்களின் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சுற்றுவேலி அமைக்கும் வேலைத்திட்டம் இந்நிகழ்வின் போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமது கோரிக்கையை ஏற்று உதவ முன்வந்த கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், அ.இ.ம. காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிபுக்கு மோட்டார் சைக்கிள், ஆட்டோ என்பன அணிவகுத்து பொல்லடி ,ரபான் வாத்தியங்களுடன் ஊர்வலமாக இளைஞர்களால் அழைத்து வரப்பட்டு விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்களால் மிக கோலாகலமாக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டு கழகங்களின் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் இரு அணிகளாக பிரிந்து கண்காட்சி கிரிக்கட் போட்டியோன்றையும் நடாத்தினர். இப்போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக்கோப்பையும் வழங்கிவைக்கப்பட்டது.

No comments: