இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டுக்கான இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு காரைதீவில் நடைபெற்றது.
திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனனின் வழிகாட்டலுக்கமைவாக, காரைதீவு பிரதேச செயலாளர் ஜி. அருணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காரையடி அம்பாறைப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலைக்குத் தேவையான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி, பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் சி. சிவலோஜினி, கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் க. சுதர்சன் மற்றும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்து அறநெறிக் கல்வியை மேம்படுத்துவதற்கும், மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்துவதற்கும் இத்தளபாடங்கள் வழங்கும் செயற்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
No comments: