News Just In

9/14/2026 07:49:00 AM

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர ஆலோசனை!

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர ஆலோசனை!



இலங்கையின் பல பகுதிகளில் இன்று (14) பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (ueat Index) அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரி, வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற வெப்பமான வானிலை ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

நேற்று மாலை 4.00 மணிக்கு இயற்கை அபாயங்கள் பற்றிய ஆரம்ப எச்சரிக்கை மையத்தால் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும்.


வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் இந்த எச்சரிக்கைக்குள் வருகின்றன.

No comments: