News Just In

9/14/2026 03:38:00 PM

மன்னார் மீனவர்களின் வலையில் சிக்கிய 300 கிலோ பிரமாண்ட “கொப்பறா” மீன்!


மன்னார் மீனவர்களின் வலையில் சிக்கிய 300 கிலோ பிரமாண்ட “கொப்பறா” மீன்!




மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் சுமார் 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன் ஒன்று சிக்கியுள்ளது.

உள்ளூர் மீனவர்களால் “கொப்பறா” என அழைக்கப்படும் குறித்த மீன், வழக்கமாக பிடிக்கப்படும் மீன்களை விட மிகப் பெரியதாக காணப்படுவதால், மீனவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, குறித்த பிரமாண்ட மீனுடன் மீனவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளதுடன், குறித்த மீனை பார்வையிடுவதற்காக பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.






No comments: