போட்டோவுல தெரியுறது சாதாரண அபார்ட்மெண்ட் கிடையாது. இது சிங்கப்பூரில் இருக்கிற 30 மாடி உயர செங்குத்து விவசாய பண்ணை. வெளியில இருந்து பார்த்தா கண்ணாடி கட்டிடம் மாதிரி தெரியும், உள்ளே முழுக்க பச்சை பசேல்னு காய்கறிகள் தான்.
இங்க மண் கிடையாது, பூச்சி மருந்து தெளிக்கிறது கிடையாது. Hydroponics முறையில தண்ணீரில் கரைக்கப்பட்ட சத்துக்கள் மூலமாகவும், LED வெளிச்சத்திலும் தான் பயிர்கள் வளருது. இதனால சாதாரண விவசாயத்தை விட 95% தண்ணீர் மிச்சமாகுது.
பருவநிலை பிரச்சனை, வெயில், மழைனு எதுவும் கிடையாது. வருஷம் 365 நாளும் அறுவடை தான். ஒரு நாளைக்கு சுமார் 1 டன் வரை fresh காய்கறிகள் இங்கிருந்து எடுக்குறாங்க.
நிலத்தை பக்கவாட்டில் தேடாம, வானத்தை நோக்கி விவசாயத்தை கொண்டு போனா என்ன செய்ய முடியும்னு சிங்கப்பூர் நிரூபிச்சிருக்கு. இது போன்ற தொழில்நுட்பம் நம்ம ஊர்களிலும் வந்தால் விவசாயத்திற்கு பெரிய பலமா இருக்கும்.
தகவல்: Singapore Food Agency
No comments: