
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகியுள்ளார்.
காவல்துறை மா அதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.
வழங்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, இன்று காலை 10.30 மணிக்கு குறித்த பணியகத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, காவல்துறை மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை மா அதிபர் (IGP) குறித்து அவர் அளித்த அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அவர் வந்தபோது கைது இடம்பெற்றுள்ளது.
No comments: