News Just In

8/04/2026 04:16:00 PM

உதயநிதி ஸ்டாலின் கைதினால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு - களமிறங்கிய அதிரடிப்படையினர் - முதல்வர் பிறப்பித்த உத்தரவு

உதயநிதி ஸ்டாலின் கைதினால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு - களமிறங்கிய அதிரடிப்படையினர் - முதல்வர் பிறப்பித்த உத்தரவு


தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கைதினையடுத்து தமிழகம் முழுவதும் வெடித்துள்ள போராட்டததை கட்டுப்படுத்த அனைத்து முக்கிய நகரங்களிலும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய பகுதிகளான சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தலைமைச் செயலகம், அண்ணா அறிவாலயம், மெரினா கடற்கரை, நீலாங்கரை மற்றும் முக்கியத் தலைவர்களின் இல்லங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், போராட்டக்காரர்களை கலைப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலவர தடுப்பு வாகனங்கள் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசும் சிறப்பு வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

No comments: