News Just In

8/19/2026 05:58:00 PM

மட்டக்களப்பில் சுமார் 100 பேரிடம் காணாமற்போனோர் தொடர்பான சாட்சியங்கள் பதிவு.

மட்டக்களப்பில் சுமார் 100 பேரிடம் காணாமற்போனோர் தொடர்பான சாட்சியங்கள் பதிவு.


( ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
காணாமற் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகம் மட்டக்களப்பில் காணாமற்போன ஆட்கள் தொடர்பான சாட்சியங்களைப் பதிவு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த விசாரணைகளில் காணாமற்போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் முன்னிலையாகி தங்களது சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.

காணாமற்போன தமது உறவினர்கள் தொடர்பில் சாட்சியத் தகவல்களை வழங்குவதற்காக 100 பேர் சாட்சிய விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

காணாமற்போனோர் தொடர்பான விவரங்கள், சம்பவங்கள் அத்துடன் தமக்குத் தெரிந்த தகவல்களை சாட்சியங்களாக பதிவு செய்வதற்காக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

No comments: