
செங்கடல் வழியாக பயணித்த இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, ஈரான் ஆதரவு யேமன் ஹூதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஈரான் ஆதரவுப் போராளிகளான யேமனின் ஹூதிகள் சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக திங்களன்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தம்மால் பிறப்பிக்கப்பட்ட முற்றுகை அறிவிப்பை மீறியதற்காக என்செலா மற்றும் லைலியா என்ற இரண்டு சவூதி எண்ணெய் கப்பல்களை நாங்கள் குறிவைத்ததாக ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களையும் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதன் விளைவாகக் கப்பல்களில் தீ ஏற்பட்டதாகவும் யஹ்யா சரீ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஆதரவுப் போராளிகளான யேமனின் ஹூதிகள் சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக திங்களன்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தம்மால் பிறப்பிக்கப்பட்ட முற்றுகை அறிவிப்பை மீறியதற்காக என்செலா மற்றும் லைலியா என்ற இரண்டு சவூதி எண்ணெய் கப்பல்களை நாங்கள் குறிவைத்ததாக ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களையும் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதன் விளைவாகக் கப்பல்களில் தீ ஏற்பட்டதாகவும் யஹ்யா சரீ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்தும் ஈரானின் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், செங்கடலில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் இரண்டாவது தடையை ஏற்படுத்துவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
செங்கடலில் கப்பல் போக்குவரத்துக்கு விடுக்கப்பட்ட புதிய அச்சுறுத்தல்களுக்கு முன்பாகவே, ஈரானால் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக முற்றுகையிடப்பட்டமை உலகெங்கிலும் பணவீக்கத்தைத் தூண்டியது. இது உலகளாவிய எண்ணெய் விலைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments: