News Just In

7/10/2026 10:40:00 AM

கதிர்காம பாதயாத்திரை - யால தேசிய பூங்காவின் குமண நுழைவாயில் இன்று முதல் திறப்பு

கதிர்காம பாதயாத்திரை - யால தேசிய பூங்காவின் குமண நுழைவாயில் இன்று முதல் திறப்பு




கதிர்காம ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்காக, யால தேசிய பூங்காவின் குமண நுழைவாயில் இன்று (10) முதல் திறக்கப்படுவதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி,குமண நுழைவாயில் இன்று முதல் எதிர்வரும் 24-ஆம் திகதி வரை பக்தர்களின் பாதயாத்திரைக்காக திறந்திருக்கும்.

இதன் மூலம் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக கதிர்காமத்தை நோக்கி செல்லும் பக்தர்கள், இந்த நுழைவாயிலைப் பயன்படுத்த முடியும்.

வனவிலங்குகளின் வாழ்விடங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சூழலைப் பாதுகாப்பதற்கும், கழிவுகளைப் பொறுப்புடன் அகற்றுவதற்கும் பக்தர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, காட்டு விலங்குகளிடம் இருந்து பக்தர்களைப் பாதுகாப்பதற்கான விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாதயாத்திரையில் ஈடுபடும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப்படையினரும் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments: