News Just In

7/21/2026 06:26:00 AM

எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்: இரு அவைகளும் 6 முறை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்: இரு அவைகளும் 6 முறை ஒத்திவைப்பு



நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பேசிக்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது தங்கை பிரியங்கா காந்தி. அருகில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்.

நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்தொடர் நேற்று தொடங்​கியது. முதல் நாளில் இரு அவை​களி​லும் எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடு​பட்​டன. இதனால் இரு அவை​களும் 6 முறை ஒத்​திவைக்​கப்​பட்​டன.

மக்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், மறைந்த 7 முன்​னாள் எம்.​பி.க்​களுக்கு இரங்​கல் தெரிவிக்​கப்​பட்​டது. பின்​னர், உச்ச நீதி​மன்ற நீதிப​தி​களின் எண்​ணிக்​கையை 38 ஆக உயர்த்த வகை செய்​யும் மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வு முறை​கேடு, கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சியின் போராட்​டம், அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்​ளிட்ட பல்​வேறு விவ​காரங்​களை எழுப்பி எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடு​பட்​டன.

‘‘அனை​வரும் இருக்​கை​யில் அமரவேண்​டும்’’ என்று மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்லா வலி​யுறுத்தினார். ஆனால், அவரது அறி​வுரையை ஏற்க மறுத்து எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் தொடர் அமளி​யில் ஈடு​பட்​டனர். இதனால் மதி​யம் 12 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

மக்​களவை மீண்​டும் கூடிய​போது அதே கோரிக்​கைகளை வலி​யுறுத்தி எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் கோஷம் எழுப்​பினர். இதனால் அடுத்​தடுத்து அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. மாநிலங்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்​போது, மறைந்த மாநிலங்​களவை உறுப்​பினர் ​களுக்கு அஞ்​சலி செலுத்​தப்​பட்​டது.

No comments: