
டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் சென்னை திரும்பியதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருநாள் உத்தியோகப்பூர்வ பயணமாக முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்காமல் சென்னை திரும்பியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
டெல்லி பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதல்வர் விஜய், மேக்கேதாட்டு அணை விவகாரம், சென்னை மெட்ரோ விரிவாக்கம், நிதி ஒதுக்கீடு மற்றும் மீனவர்கள் கைது உள்ளிட்ட பல கோரிக்கைகள் தொடர்பாக மனு வழங்கியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பானது டெல்லி பயணத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்த நிலையில், திடீரென இரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கேரள முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் விஜய் பங்கேற்கவில்லை. சென்னையில் விஜய் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்றதற்காக ராகுலை சந்தித்து விஜய் நன்றி கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. விஜயின் அடுத்தடுத்த புறக்கணிப்பால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments: