
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பெருமளவிலான 'குஷ்' (Kush) மற்றும் 'ஹஷிஷ்' (Hashish) ஆகிய போதைப்பொருட்களுடன் 22 பௌத்த பிக்குகள் சனிக்கிழமை (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஒரு அனுசரணையாளரின் நிதி உதவியுடன் தாய்லாந்தின் பாங்கொக் நகருக்குச் சென்றுள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் தங்கியிருந்தபோது சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களது கைபேசிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.

No comments: