News Just In

3/10/2026 12:10:00 PM

யாழ்ப்பாணத்தில் இரு குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள்வெட்டில் முடிந்தது. ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இரு குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள்வெட்டில் முடிந்தது.  ஒருவர் பலி.


யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ஒரு குருக்கள் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் இன்று (9) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நயினாதிவு வீரகத்தி வினாயகர் ஆலய பூசகருக்கும் நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமிர்த்தம் நயினாதீவுக்கு சென்றிருந்த குருக்களுக்குமிடையில் ஏற்பட்ட தொழில் தகராறே வாள்வெட்டுவரை சென்று கொலையில் முடிந்துள்ளது.

உயிரிழந்தவர் நாவலப்பிட்டியாச் சேர்ந்த 40 வயதான கிருஷ்ணகுமார் எனும் குருக்களே என தெரிவிக்கப்டுகிறது.

No comments: