News Just In

3/26/2026 11:00:00 AM

மேற்கு ஆசியாவுக்கு மேலும் 2,000 வீரர்கள் அனுப்பும் அமெரிக்கா

மேற்கு ஆசியாவுக்கு மேலும் 2,000 வீரர்கள் அனுப்பும் அமெரிக்கா


 மேற்​காசிய நாடான ஈரானுடன் அமெரிக்காவும் இஸ்​ரேலும் போரிட்டு வரு​கின்​றன. இதனால் உலக நாடு​களில் கச்சா எண்​ணெய் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இந்த நெருக்​கடிக்கு தீர்வு காண அமெரிக்கா தனது கடற்​படையை வளை​குடா நோக்கி அனுப்​பி​யுள்​ளது. இதில் சுமார் 4,500 வீரர்​கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்​நிலை​யில் ஈரானுடன் புதிய ராஜதந்​திர முயற்​சியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரிசீலித்து வரும் நிலை​யில், அவருக்​குக் கூடு​தல் ராணுவ வாய்ப்​பு​களை வழங்​கும் விதமாக, அமெரிக்க ராணுவத்​தின் 82-வது விமானப் படையை சேர்ந்த சுமார் 2,000 வீரர்​களை மேற்கு ஆசியா செல்​லு​மாறு பென்​டகன் உத்​தர​விட்​டுள்​ளது. இவர்​கள் 18 மணி நேரத்​துக்​குள் உலகின் எந்​தப் பகு​திக்​கும் செல்​லக்​கூடிய திறன் கொண்ட, சுமார் 3,000 வீரர்​களை கொண்ட ஒரு படைப்​பிரி​வில் இடம்​பெற்​றுள்ள வீரர்​கள் ஆவர்.

No comments: