News Just In

2/16/2026 07:19:00 PM

நாட்டை உலுக்கிய இரட்டைக் கொலை - பொலிஸாரிடம் சிக்கியுள்ள சகோதரர்கள்

நாட்டை உலுக்கிய இரட்டைக் கொலை - பொலிஸாரிடம் சிக்கியுள்ள சகோதரர்கள்



அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவரே கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் கொட்டாவையில் வைத்துமேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேகநபர்களால் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.

நாட்டையே உலுக்கிய குறித்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: