News Just In

2/15/2026 06:08:00 AM

சுமந்திரனின் பெரும் சதி! பகிரங்கமாக அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி

சுமந்திரனின் பெரும் சதி! பகிரங்கமாக அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி




தமிழ் தேசியவாதத்தை நிராகரித்து தேசியமக்கள் சக்தியோ, இலங்கை தமிழரசுக்கட்சியோ வடக்கு கிழக்கில் செயற்பட முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானகஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியவாதத்தினுடைய கடும் விமர்சனையாளர் சுமந்திரன் தமிழ் தேசியவாதத்தை பேசாமல் எதுவும் செய்யமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் மக்களினுடைய போராட்டங்களை விமர்சித்த சுமந்திரனே தற்போது போராட்டத்தை நடாத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனி வடக்கு கிழக்கில் தேசியமக்கள் சக்தி வெல்லப்போவதும் இல்லை.தமிழரசுக்கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்கப்போவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: