(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
புத்துயிர்பெறும் பாதை என்னும் தொனிப் பொரு ளில் 2026ஆம் ஆண்டு கிராமிய வீதிகளை மேம் படுத்தும் வேலைத்திட்டத்தின் தேசிய வேலைத் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது.
.புத்துயிர் பெறும் பாதை" எனும் தொனிப்பொருளில் கிராமப்புற பாதைமேம்பாட்டுத் திட்டத் திற்கு முதற் கட்டமாக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு நாட ளாவிய ரீதியில் 76 வீதிகள் புனரமைப்பு பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்புமாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் பிரஜா சக்திகுழுவின் ஆலோசைக்கமைய நிருமாணிக் கப்படவிருக்கும் மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சங்கர் புறம் விளாவடி வீதி ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது
810 மீட்டர் நீளமான இவ் வீதியானது கொங்கிரீட் வீதியாக 2 8 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுபிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வீதிபிவிருத்திப் பணிகளை வைபவரீதியாக ஆரம் பித்துவைத்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் வனிதா செல்லப்பெருமாள் வீதி அபி விருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ.எம்.சீ.ரீ.கே.அத்தநாயக்க, திட்ட வதிவிட பொறியலாளர்.ரீ.அமிர்தலிங்கம் போர தீவுப்பற்று பிரதேச செயலாளர் ஏ.ரங்கராஜன் வெல்லாவெளி,பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சங்கரபுரம் பகுதியில் பெருமளவான மக்கள் பயன் படுத்தும் இந்த வீதியானது.மழை காலங்களில் மக் கள் பயனிக்கமுடியாத நிலையில்இருந்து வந்துள் ளது . இந்த வீதியை அமைக்க அரசாங்கம் முன்னெ டுத் துள்ள நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
No comments: