News Just In

1/27/2026 11:57:00 AM

குழந்தைகளுக்கு தேவையான கற்றல் வசதிகளை வழங்குவது அவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும் - ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் அபூபக்கர் நளீர்

குழந்தைகளுக்கு தேவையான கற்றல் வசதிகளை வழங்குவது அவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும் - ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் அபூபக்கர் நளீர்


நூருல் ஹுதா உமர்

கல்வி என்பது சமூக முன்னேற்றத்தின் அடித்தளமாக விளங்குகிறது என்றும், சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு தேவையான கற்றல் வசதிகளை வழங்குவது அவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும் என்றும் நளீர் பௌண்டஷன் தலைவர், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் அபூபக்கர் நளீர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட மத்தியமுகாம் நான்காம் கிராமம் வாணி பாலர் பாடசாலையில் புதிதாக இணைந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு , பாலர் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், பிரதேச மற்றும் இன வேறுபாடுகள் இன்றியே நளீர் பௌண்டஷன் சமூகப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், அனைத்து சமூகங்களின் குழந்தைகளுக்கும் சம வாய்ப்புகளை உருவாக்குவதில் தமது நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கற்றல் உபகரணங்கள் வழங்குதல், கல்வி சூழலை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்கள் நளீர் பௌண்டஷன் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியையும், கல்வி மீதான ஆர்வத்தையும் அதிகரித்ததாக நிகழ்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: