லலித்குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் என தெரிவித்துள்ள லலித்தின் தந்தை ஆறுமுகம் வீரராஜா லலித்குகனிற்கும் காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களிற்கும் இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொலிஸ்தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-
எனது மகன் காணாமல்போய் 14 வருடங்களாகின்றன,முறைப்பாடொன்றை செய்வதற்காக சிஐடி அலுவலகத்திற்கு சென்றோம்.
இதிலாவது நல்லது கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். நாளைமறுதினம் வழக்கு உள்ளது வழக்கில் நல்ல முடிவு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கின்றோம்.
லலித்குகன் மாத்திரமல்ல பத்துபதினைந்து இருபதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளனர்.அவர்களின் குடும்பத்தவர்கள் பரிதவிக்கின்றனர்.
அவங்களிற்கும் ஒரு நீதி கிடைக்கவேண்டும், எங்களிற்கும் நீதி கிடைக்கவேண்டும்.
லலித்குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும், இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்கவேண்டும்.எனது பிள்ளைக்கும் ஏனையவர்களிற்கும் நீதி கிடைக்குமாக இருந்தான் நான் இந்த அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பேன்.
No comments: