
போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து தற்போது ஈரானுக்கு உடன்பாடு இல்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி(Seyed Abbas Araghchi) கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் ஈரானிய மக்களுக்கு எதிரான தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை இஸ்ரேலிய ஆட்சி நிறுத்தினால், அதற்கு பிறகும் எங்கள் பதிலைத் தொடர நாங்கள் விரும்பவில்லை.
இருப்பினும், எமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
மேலும், 'போர் நிறுத்தம்' தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்தை ஈரானின் செய்தி தளங்கள் முற்றிலும் மறுத்துள்ளன.
ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு முறையான அல்லது முறைசாரா போர் நிறுத்த முன்மொழிவு எதனையும் ஈரானிடமிருந்து அவர் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் , இன்னும் ஒரு மணிநேரத்திற்குள, போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பு தவறானது என்பதைக் இஸ்ரேலுக்கு ஒரு "செயல்பாட்டு" பதில் மூலம் ஈரான் காண்பிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரு வாரங்களாக நடைபெறும் ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா களமிறங்கி, ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் முதலில் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்ததுடன் கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதனை தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப், ஈரான்-இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே ஈரான் மற்றும் இஸ்ரேலில் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: