மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைச் சுற்றியுள்ள நீண்டகால சர்ச்சை தீர்க்கப்படுமா..! இரா. சாணக்கியன்
மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைச் சுற்றியுள்ள நீண்டகால சர்ச்சை தீர்க்கப்படுமா..! மாகாணசபை தேர்தல் தொடர்ப்பான சட்டமூல வாசிப்பு பாராளுமன்றத்தில் இன்றைய தினம் - இரா. சாணக்கியன்
இன்றையதினம் பாராளுமன்றத்தில் 05.06.2025. மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு ஏதுவாக என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட தனி நபர் சட்ட மூலம் தொடர்பான முதல் வாசிப்பானது இன்றைய தினம் இடம் பெற்றது.
மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைச் சுற்றியுள்ள நீண்டகால சர்ச்சையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்ட நிலைமை மற்றும் திருத்தம் தொடர்பில் மேற்கொண்டு ஆராயப்படும் மற்றும் மாகாண சபை தேர்தல்களைத் தாமதிக்க பயன்படுத்தப்படும் குழப்பத்தையும் நீக்குவது, தேர்தல் ஆணைக்குழுவினை உடனடியாக தேர்தல்களை நடத்துவதற்கு அதிகாரமளிப்பதும் இம்மசோதாகத்தின் நோக்கங்களில் அடங்கும். இவ் தேர்தலை விரைவாக நடாத்துவது தொடர்பில் அரசு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றது என்பது இன்றளவிலும் கேள்விக்குறியாக உள்ளது. இலங்கையின் மாகாண சபைகள் 1987ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் நிறுவப்பட்டன. இது அதிகாரத்தை மத்தியிலிருந்து பிராந்தியங்களுக்கு மாற்றும் நோக்குடன், குறிப்பாக இன மோதல்களை எதிர்கொள்ளும் சூழலில், பிராந்திய நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் இயங்குகிறது. தற்போதைய சட்டப்படி, மாகாண சபை தேர்தல்கள் 1988ஆம் ஆண்டு Provincial Councils Election Act No. 2ன் கீழ் நடைபெற வேண்டும்; இவை ஐந்து ஆண்டுகள் காலத்திற்கான தேர்தல்களாக இருக்க வேண்டும். எனினும், 2017இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு பிறகு, இலங்கையில் எந்தவொரு மாகாண சபை தேர்தல்களும் நடாத்தப்படவில்லை.
6/05/2025 03:44:00 PM
Home
/
Unlabelled
/
மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைச் சுற்றியுள்ள நீண்டகால சர்ச்சை தீர்க்கப்படுமா..?இரா. சாணக்கியன்
மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைச் சுற்றியுள்ள நீண்டகால சர்ச்சை தீர்க்கப்படுமா..?இரா. சாணக்கியன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: