நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் !
நாடளாவிய ரீதியில் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் இன்று வியாழக்கிழமை (05) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
சுகாதார அமைச்சு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காததால் முன்னெடுக்கப்படும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் (JCPSM) பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இருப்பினும், புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு மற்றும் சிறுவர்கள் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் மத்திய இரத்த வங்கி (CBB) ஆகியன இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடாது என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ ஆய்வக சேவைகள், மருந்தகத் துறைகள் மற்றும் பிற துணை மருத்துவ சேவையைச் சேர்ந்த ஐந்து தொழில்கள் இன்றைய தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்து கொள்ளும் என என சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
6/05/2025 10:41:00 AM
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments: