News Just In

6/23/2025 08:48:00 AM

200 அடி ஆழம் பூமியை துளைத்த ஜிபியு-57 வெடிகுண்டு: ஈரானின் போர்டோ அணுசக்தி தளம் தகர்ந்தது எப்படி?

200 அடி ஆழம் பூமியை துளைத்த ஜிபியு-57 வெடிகுண்டு: ஈரானின் போர்டோ அணுசக்தி தளம் தகர்ந்தது எப்படி?




அமெரிக்கா​வுடன் மோதல் போக்கை கடைப்​பிடிக்​கும் வடகொரி​யா, ஈரான் ஆகிய நாடு​கள் மலைக்கு அடி​யில் அணு சக்தி தளங்​களை அமைத்து உள்​ளன. இந்த அணு சக்தி தளங்​களை அழிக்க பூமியை துளைத்து தாக்​குதல் நடத்​தும் வெடிகுண்​டு​களை தயாரிக்க கடந்த 2002-ம் ஆண்​டில் அமெரிக்கா ஆய்​வினை தொடங்​கியது.

புதிய வெடிகுண்டை தயாரிக்​கும் பணி அமெரிக்க நிறு​வனங்​களிடம் வழங்​கப்​பட்​டன. கடந்த 2011-ம் ஆண்​டில் ஜிபியு 57 வெடிகுண்டு அறி​முகம் செய்​யப்​பட்​டது. இது 69 அடி நீளம், 2.6 அடி விட்​டம், 14,000 கிலோ எடை கொண்​டது ஆகும். இந்த வெடிகுண்​டில் ஜிபிஎஸ் கரு​வி​யும் பொருத்​தப்​பட்டு இருக்கிறது. இதன்​மூலம் தாக்க வேண்​டிய இலக்கை மிக துல்​லிய​மாக தாக்கி அழிக்​கும்.

ஈரானின் போர்டோ அணு சக்தி தளத்​தின் மீது தாக்​குதல் நடத்த பி2 ரகத்தை சேர்ந்த 7 போர் விமானங்​களில் தலா இரு ஜிபியு 57 ரக வெடிகுண்​டு​கள் பொருத்​தப்​பட்​டன. இந்த வெடிகுண்​டு​கள் போர்டோ தளத்​தின் மீது துல்​லிய​மாக வீசப்​பட்​டன. இவை 200 அடி ஆழத்​துக்கு பூமியை துளைத்து சென்று வெடித்​துச் சிதறின. இதில் போர்டோ அணுசக்தி தளம் முழு​மை​யாக தகர்க்​கப்​பட்​டது.

No comments: