News Just In

6/05/2025 10:20:00 AM

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது ஆற்றங்கரை பிரதேசத்தை சுத்தம் செய்தலும் 150 வேப்ப மரக்கன்றுகள் நடும் விஷேட வேலைத்திட்டமும்

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது ஆற்றங்கரை பிரதேசத்தை சுத்தம் செய்தலும் 150 வேப்ப மரக்கன்றுகள் நடும் விஷேட வேலைத்திட்டமும்


நூருல் ஹுதா உமர்
Clean SriLanka வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சர்வதேச சுற்றாடல் தினம் வெற்றிகரமாக இன்று 2025.06.04 முன்னெடுக்கப்பட்டது.

"நில மீட்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான தாங்கு திறன்" எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வருட உலக சுற்றாடல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதற்கமைய ஆற்றங்கரை சூழலை சுத்தம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இவ்வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்திற்கு உட்பட்ட ஆற்றங்கரை பிரதேசத்தை சுத்தம் செய்து 150 வேப்ப மரக்கன்றுகள் நடும் விசேட வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.ராபி, சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஹ்பிகா மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் ஆகியோர்களின் தலைமை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி புஷ்ப ரஜினி, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், இளைஞர் விளையாட்டு கழக அமைப்புக்கள், மாணவர்கள், சுற்றாடல் முன்னோடி கழகம் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு தங்களது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் நடைபவனி ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர். இந்த நடைபவனி ஆனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொதுமக்களின் பொறுப்புணர்வை வளர்க்கவும் நோக்கமாகக் கொண்டது

No comments: