முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை அம்பாறை மாவட்டம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு அங்கமாக பொத்துவில் தேர்தல் தொகுதியின் அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் நன்மை கருதி பொதுமக்கள் ஓய்வை கழிக்கும் விதமாகவும் சிறுவர்களின் நன்மை கருதியும் தனது டீ- 100 திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை கடற்கரை சிறுவர் பூங்காவை மறுசீரமைக்க சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் ஒளியூட்டப்பட்டு, சிறுவர் விளையாட்டு உபகரணங்களுடன் புதிய வடிவில் சீரமைக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மேலும் இந்த அட்டாளைச்சேனை கடற்கரை சிறுவர் பூங்காவில் முன்னெடுக்க வேண்டிய மேலதிக அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.
இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் ஆலோசகர் எம்.ஜே.எம். அன்வர் நௌஸாத், வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments: