News Just In

5/24/2025 08:52:00 AM

மட்டக்களப்பிலிருந்து நள்ளிரவில் தென்னிலங்கை நோக்கி சென்ற பேருந்து விபத்து - ஒருவர் பலி - பலர் காயம்!

தமிழர் பகுதியில் இருந்து நள்ளிரவில் தென்னிலங்கை நோக்கி சென்ற பேருந்து விபத்து - ஒருவர் பலி - பலர் காயம்


கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

பேருந்துக்கு முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 12 பயணிகள் மற்றும் லொறியின் ஓட்டுநர் காயமடைந்து தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த பயணி ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.

சடலம் தங்காலை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments: